மேகத்திலிருந்து இறங்கி வந்ததாய்ச் சொன்னாய்.
வெள்ளுடை தரித்து முற்றிலும் நனைந்திருந்தாய்.
ப்ரத்யேகமாய் உனக்கென வைத்திருந்த பூப்போட்டடவல் ஒன்றினால்துவட்டிக் கொள்ளச் சொன்னேன். பிறகு சிரித்தாய்.
சிரிப்பினூடே கண்கள் கலங்கின உனக்கு.
உனக்கெனத் தேநீர் தயாரிக்கச் சென்ற போது
நான் மட்டும் உறங்கவென இருக்கிற கட்டிலிலிருந்து
தள்ளி வெளியில் இருந்து கற்றையாய் விழுகிற
சூரிய வெளிச்சத்தில் சுவரில் சாய்ந்து
கால்கள் நீட்டி உட்கார்ந்து கொண்டாய்
சில நாட்களாகவே பெருக்கியிராத தரையில்.
பரபரப்பும், பெருவலியும் தெரியும் உன்னை
சூரிய ஒளி மஞ்சள் பழுப்பாய் விளிம்புகள் காட்டிற்று.
துயரங்களை சுமப்பது எல்லோரும்தான் என்பதை நான் சொல்லவில்லை.
புத்தகம் ஒன்றினை எடுத்து வாசிக்க முயல்கிறேன்.
நீ எழுந்து போயிருக்கலாம் எப்போதேனும்.
புல்லாங்குழலிசையை மிக நேர்த்தியாக வாசித்துக் கொண்டு
உச்சி வெய்யில் காய்ந்த தெருவில்சென்று கொண்டிருந்தாள்
கழைக்கூத்தாடிப் பெண்ணொருத்தி.
Wednesday, September 2, 2009
Thursday, August 20, 2009
இருளும் புழுக்கமும் நிறைந்ததாக இருக்கிறது
என் வசிப்பிடம். எப்போதாவது கனவுகளில்
யாரோ துரத்துகிற அவலமும் நடக்கிறது.
ஓசித் தேநீரும், மசாலா வடைகளும்
வயிறு நிறைப்பதாக இருப்பதோடு
பழக்கமும் ஆகி விட்டது. பேருந்திலிருந்து இறங்கி
பல கடைகளையும், சாக்கடைகளையும் தாண்டிவருவது
புதியவர்களுக்கு
அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கலாம்.
எனக்கில்லை.
சட்டையில்லாத பிள்ளைகள் முகத்தில் சளி ஒழுக
குடிசைகளின் வெளியிலிருக்கும்கோரைப்பாய்களில் அமர்ந்து
கதறிக் கொண்டிருப்பதுசிலருக்கு எரிச்சல் தரலாம்.
என் வாழ்வும் அது என்பதால்
எனக்கில்லை. தள்ளாட்டமான இரவுகளில்
தெரு நாய்கள் மோப்பம் கண்டு விலகிவிடும்.
இலக்கில்லாமல் எப்போதும் போல விடியற்காலையில்
கிளம்பிவிடும் என்னை அந்தக்காட்சி ஈர்த்தது.
கழிவுப்பொருட்களை இட்டு நிரப்பிய
குப்பைத் தொட்டியருகே ஒட்டப்பட்டசினிமா போஸ்ட்டரொன்றில்
நமீதாவின் மார்புமீது
அழுக்குத் துணிகளால் நிரம்பி வழிந்த ஒரு தாடியுள்ள பிச்சைக்காரன்
சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தான்!
என் வசிப்பிடம். எப்போதாவது கனவுகளில்
யாரோ துரத்துகிற அவலமும் நடக்கிறது.
ஓசித் தேநீரும், மசாலா வடைகளும்
வயிறு நிறைப்பதாக இருப்பதோடு
பழக்கமும் ஆகி விட்டது. பேருந்திலிருந்து இறங்கி
பல கடைகளையும், சாக்கடைகளையும் தாண்டிவருவது
புதியவர்களுக்கு
அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கலாம்.
எனக்கில்லை.
சட்டையில்லாத பிள்ளைகள் முகத்தில் சளி ஒழுக
குடிசைகளின் வெளியிலிருக்கும்கோரைப்பாய்களில் அமர்ந்து
கதறிக் கொண்டிருப்பதுசிலருக்கு எரிச்சல் தரலாம்.
என் வாழ்வும் அது என்பதால்
எனக்கில்லை. தள்ளாட்டமான இரவுகளில்
தெரு நாய்கள் மோப்பம் கண்டு விலகிவிடும்.
இலக்கில்லாமல் எப்போதும் போல விடியற்காலையில்
கிளம்பிவிடும் என்னை அந்தக்காட்சி ஈர்த்தது.
கழிவுப்பொருட்களை இட்டு நிரப்பிய
குப்பைத் தொட்டியருகே ஒட்டப்பட்டசினிமா போஸ்ட்டரொன்றில்
நமீதாவின் மார்புமீது
அழுக்குத் துணிகளால் நிரம்பி வழிந்த ஒரு தாடியுள்ள பிச்சைக்காரன்
சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தான்!
Friday, July 31, 2009
இழப்பு
பணம் சம்பாதித்துவர
வேலைக்கான புறப்பாடு.
நினைவிருக்கிறதா,
ஆகஸ்டின் முதல்வாரம்!
நிலவில்லாத வெளிச்ச இருள்.
இரவு
நெடுமூச்சாய் கறுப்பு தார்ச்சாலை.
சன்னத்தூறலொடு சிலபோது மின்னல்கள்.
குடைபிடித்து, ஒண்டி...
மவுன பாஷையில்
நீயும் நானும்
சுற்றம் சூழ!
ரசித்தேன்- உன்மேல் ஏதோ
ஒரு சுகந்த மணம்!
'சொல்லி விடலாமா?'
வேதனையான மவுன முகங்களில்...
கண்களில்...
நம் அமைதியில்...
'இப்போதேனும் சொல்லிவிட வேண்டும்!'
நீ துடித்தாய்
நானும்தான்!
ஆனால்,
பேசவில்லை, உறவினர்கள்
பஸ்ஸேற்றி விட்டார்கள்.
அதற்குள் நீ...!
வேலைக்கான புறப்பாடு.
நினைவிருக்கிறதா,
ஆகஸ்டின் முதல்வாரம்!
நிலவில்லாத வெளிச்ச இருள்.
இரவு
நெடுமூச்சாய் கறுப்பு தார்ச்சாலை.
சன்னத்தூறலொடு சிலபோது மின்னல்கள்.
குடைபிடித்து, ஒண்டி...
மவுன பாஷையில்
நீயும் நானும்
சுற்றம் சூழ!
ரசித்தேன்- உன்மேல் ஏதோ
ஒரு சுகந்த மணம்!
'சொல்லி விடலாமா?'
வேதனையான மவுன முகங்களில்...
கண்களில்...
நம் அமைதியில்...
'இப்போதேனும் சொல்லிவிட வேண்டும்!'
நீ துடித்தாய்
நானும்தான்!
ஆனால்,
பேசவில்லை, உறவினர்கள்
பஸ்ஸேற்றி விட்டார்கள்.
அதற்குள் நீ...!
தவிக்கும் மனது!
சட்டைப்பையில்
சில்லரைக் காசுகள் இல்லாத
பேருந்துப்பயணங்களில்
முகத்தின் முன் யாசகத்திற்காய் நீளும்
கரங்களைக் கூட சிலசமயம்
தவிர்த்துவிட முடிகிறது.
அதற்காகத் தவிக்கும்
மனதைத்தான் சமாதானப்படுத்தமுடியவில்லை
எப்போதும்!
சில்லரைக் காசுகள் இல்லாத
பேருந்துப்பயணங்களில்
முகத்தின் முன் யாசகத்திற்காய் நீளும்
கரங்களைக் கூட சிலசமயம்
தவிர்த்துவிட முடிகிறது.
அதற்காகத் தவிக்கும்
மனதைத்தான் சமாதானப்படுத்தமுடியவில்லை
எப்போதும்!
Tuesday, July 28, 2009
ஆயா
ஆயா எப்பவாவது ஊருக்கு வரும்.
தலையில ஒரு மூட்டை
இடுப்புல ஒரு பையி.
விடிகாலைல கிளம்பி
பத்தர பதினொன்ர மணிக்கு வரும்.
பஸ்ஸுல இறங்கி ரெண்டு மைலு
நடந்தேதான் வரும் வெயில்ல.
செருப்பாவது ஒண்ணாவது.
பொடி சுடுந்தான்.
பேரப் புள்ளுவ வூட்ல இருக்கிற
நாயித்துக் கியமையா பார்த்து வரும்.
அவிச்ச தட்டப்பயிரு, பச்சப்பயிரு
அப்பப்பக்கி கிடைக்கிற
கெளாக்கா, ஈச்சம்பழம், வெள்ளரிப்பழம்ன்னு
சுமந்து வரும்.
வெல்லம் சேத்து இடிச்சி புடிச்ச
பச்சப்பயிருருண்டை பெரிசா அஞ்சாறு.
வேகவச்சி கொஞ்சம், வறுத்து கொஞ்சம்ன்னு
மல்லாட்ட இருக்கும் பையில.
"புள்ளுவ ஆசயா சாப்புடும்"ன்னு.
எடுத்து எங்ககிட்ட கொடுத்து
நாங்க ஆசயா சாப்புடறத பார்த்து
ரசித்து சிரிக்கும் ஆயா.
செருவாடு சேத்தத எடுத்து கொடுக்கும் என்கிட்ட
சுருக்கு பையில அன்னிக்கே இருக்கும் 100 ரூவா.
"இந்தாய்யா . வச்சிக்க. ஏதாவது வாங்கித் தின்னு"
வந்தா ஒரு அர மணி நேரம்
கட்டிட்டு இருக்கிற நூல் புடவைத் தலைப்பை
அப்படியே விரிச்சி
மண் தரையில படுத்துக்கும். அசதி.
"ஆடு மாடுவள அப்படிஅப்டியே வுட்டுட்டு வந்தேன்
கெளம்புறன்யா"ன்னு சொல்லும் மதியம் சாப்டவுடனே.
"சரி"ன்னு சொல்லிட்டு வெளயாடப் போயிறுவோம்.
'ஆயாக்கு டாட்டா காட்டு'ன்னு
சொல்லி வாங்கிக்கும்.
அத்தனை சந்தோஷம் அதுக்கு, நாங்க டாட்டா காட்டுறதில.
"நல்லா படிங்க"ன்னு சொல்லிட்டு போன ஆயா இப்ப இல்ல.
கடசீயா மூஞ்சக் கூட பாக்க முடியாமப்போச்சு.
"இப்பக் கூட எங்கள நெனப்பியா ஆயா?!!"
- அன்புடன்ப.மதியழகன்
தலையில ஒரு மூட்டை
இடுப்புல ஒரு பையி.
விடிகாலைல கிளம்பி
பத்தர பதினொன்ர மணிக்கு வரும்.
பஸ்ஸுல இறங்கி ரெண்டு மைலு
நடந்தேதான் வரும் வெயில்ல.
செருப்பாவது ஒண்ணாவது.
பொடி சுடுந்தான்.
பேரப் புள்ளுவ வூட்ல இருக்கிற
நாயித்துக் கியமையா பார்த்து வரும்.
அவிச்ச தட்டப்பயிரு, பச்சப்பயிரு
அப்பப்பக்கி கிடைக்கிற
கெளாக்கா, ஈச்சம்பழம், வெள்ளரிப்பழம்ன்னு
சுமந்து வரும்.
வெல்லம் சேத்து இடிச்சி புடிச்ச
பச்சப்பயிருருண்டை பெரிசா அஞ்சாறு.
வேகவச்சி கொஞ்சம், வறுத்து கொஞ்சம்ன்னு
மல்லாட்ட இருக்கும் பையில.
"புள்ளுவ ஆசயா சாப்புடும்"ன்னு.
எடுத்து எங்ககிட்ட கொடுத்து
நாங்க ஆசயா சாப்புடறத பார்த்து
ரசித்து சிரிக்கும் ஆயா.
செருவாடு சேத்தத எடுத்து கொடுக்கும் என்கிட்ட
சுருக்கு பையில அன்னிக்கே இருக்கும் 100 ரூவா.
"இந்தாய்யா . வச்சிக்க. ஏதாவது வாங்கித் தின்னு"
வந்தா ஒரு அர மணி நேரம்
கட்டிட்டு இருக்கிற நூல் புடவைத் தலைப்பை
அப்படியே விரிச்சி
மண் தரையில படுத்துக்கும். அசதி.
"ஆடு மாடுவள அப்படிஅப்டியே வுட்டுட்டு வந்தேன்
கெளம்புறன்யா"ன்னு சொல்லும் மதியம் சாப்டவுடனே.
"சரி"ன்னு சொல்லிட்டு வெளயாடப் போயிறுவோம்.
'ஆயாக்கு டாட்டா காட்டு'ன்னு
சொல்லி வாங்கிக்கும்.
அத்தனை சந்தோஷம் அதுக்கு, நாங்க டாட்டா காட்டுறதில.
"நல்லா படிங்க"ன்னு சொல்லிட்டு போன ஆயா இப்ப இல்ல.
கடசீயா மூஞ்சக் கூட பாக்க முடியாமப்போச்சு.
"இப்பக் கூட எங்கள நெனப்பியா ஆயா?!!"
- அன்புடன்ப.மதியழகன்
பள்ளி

அய்யனார் குளத்தருகே அமைந்திருந்தது.
மழை பெய்தால் ஒழுகும் கூரை.
மண் தரையெங்கும் திட்டுத்திட்டாக
மழைநீர் தேங்கியிருக்கும்.
பள்ளி வந்தவுடன் அள்ளிப் போடவேண்டும் பிள்ளைகள்.
அங்கங்கு திறந்திருக்கும் சுவர்கள்.
பெரிய வாத்தியார் வீட்லருந்து பெரிய பெரிய
சாக்குப்பைகள் கொண்டுவந்து ஈரத்தரையில் போட்டமருவோம்.
கோனூர் வாத்தியார்தான் எல்லோருக்கும் வாத்தியார்.
ஒரே வாத்தியார்தான்.
வெற்றிலைப் பாக்கு
ஒன்றிரண்டு வாழைப்பழம் வைத்து
எலுமிச்ச மிட்டாய் எல்லோருக்கும் கொடுத்து
அகலப்பரப்பிய நெல்லில்
'அ' எழுதித் துவக்கினோம் அகரத்துப் பிள்ளைகள்.
கைப்பிடித்து அவர் மடியமர்ந்து
அவர் சொல்லச் சொல்ல மலங்க விழித்து
துவக்கினோம் துவக்கக் கல்வியை!
காலை வந்ததுமே பசங்க கூப்பிடத்தான் போவோம்.
ஒரு குச்சியெடுத்துட்டு அவரும் வருவார்
ஊரைச்சுத்தி.
சிலபேரத்தான் புடிக்கவே முடியாது.
டிமிக்கி கொடுத்துடுவானுவ பள்ளிக்கூடத்துக்கு.
'என்ன ராமாஞ்சம், ஒம்மொவன ரெண்டு நாளா காணோம்?'
''பயிரு தூக்கிப் போடறான் வாத்யார, வந்துடுவான்
''உருப்பட வுடுய்யா அவன'வாத்தியாரின் வேதனை ராமாஞ்சத்துக்குப் புரியாது.
'எங்களயெல்லாம் கோனூர் அண்ணன்
விட்டத்துல தொங்கவுட்டு அடிப்பாரு.
அப்பவும் படிப்பேறல எனக்கு' சொல்லும் முருகேசன் சித்தப்பா.
ஊரில் அத்தனை பேரையும் தெரியும் வாத்தியாருக்கு.
'எதுக்கு வாத்யார அவனவன் பொழப்ப கெடுக்குற'ன்னு
வாத்யார சலிச்சிப்பார் மளிகைக்கடை வெச்சிருக்கிற
வெங்கட்ராம செட்டியார். பெரும் நிலபுலாதிபதி.
ஊருல கொஞ்சப்பய படிச்சிட்டு இன்னிக்கு
உருப்படியா இருக்கான்னா கோனூர் வாத்தியார் புண்ணியந்தான்.
இப்பவும் எப்பவாவது பார்ப்பதுண்டு
கல்யாணமோ இழவோ என்று எதை முன்னிட்டாவது
ஊருக்குப் போகையில். அவரும் வந்திருப்பார் கோனூரிலிருந்து.
கசங்கிய வேட்டியில் தளர்ந்த மேனியில்
காலர் கிழிந்த ஒரு சட்டை போட்டிருப்பார்.
"நல்லா இருக்கியா?' 'சந்தோசமா இருக்குப்பா
உங்களயெல்லாம் பார்க்கும்போது"ன்னு சொல்வார்.
"நீங்க போட்ட பிச்சைதான் சார்"ன்னு சொல்லத் தோன்றும்.
மழை பெய்தால் ஒழுகும் கூரை.
மண் தரையெங்கும் திட்டுத்திட்டாக
மழைநீர் தேங்கியிருக்கும்.
பள்ளி வந்தவுடன் அள்ளிப் போடவேண்டும் பிள்ளைகள்.
அங்கங்கு திறந்திருக்கும் சுவர்கள்.
பெரிய வாத்தியார் வீட்லருந்து பெரிய பெரிய
சாக்குப்பைகள் கொண்டுவந்து ஈரத்தரையில் போட்டமருவோம்.
கோனூர் வாத்தியார்தான் எல்லோருக்கும் வாத்தியார்.
ஒரே வாத்தியார்தான்.
வெற்றிலைப் பாக்கு
ஒன்றிரண்டு வாழைப்பழம் வைத்து
எலுமிச்ச மிட்டாய் எல்லோருக்கும் கொடுத்து
அகலப்பரப்பிய நெல்லில்
'அ' எழுதித் துவக்கினோம் அகரத்துப் பிள்ளைகள்.
கைப்பிடித்து அவர் மடியமர்ந்து
அவர் சொல்லச் சொல்ல மலங்க விழித்து
துவக்கினோம் துவக்கக் கல்வியை!
காலை வந்ததுமே பசங்க கூப்பிடத்தான் போவோம்.
ஒரு குச்சியெடுத்துட்டு அவரும் வருவார்
ஊரைச்சுத்தி.
சிலபேரத்தான் புடிக்கவே முடியாது.
டிமிக்கி கொடுத்துடுவானுவ பள்ளிக்கூடத்துக்கு.
'என்ன ராமாஞ்சம், ஒம்மொவன ரெண்டு நாளா காணோம்?'
''பயிரு தூக்கிப் போடறான் வாத்யார, வந்துடுவான்
''உருப்பட வுடுய்யா அவன'வாத்தியாரின் வேதனை ராமாஞ்சத்துக்குப் புரியாது.
'எங்களயெல்லாம் கோனூர் அண்ணன்
விட்டத்துல தொங்கவுட்டு அடிப்பாரு.
அப்பவும் படிப்பேறல எனக்கு' சொல்லும் முருகேசன் சித்தப்பா.
ஊரில் அத்தனை பேரையும் தெரியும் வாத்தியாருக்கு.
'எதுக்கு வாத்யார அவனவன் பொழப்ப கெடுக்குற'ன்னு
வாத்யார சலிச்சிப்பார் மளிகைக்கடை வெச்சிருக்கிற
வெங்கட்ராம செட்டியார். பெரும் நிலபுலாதிபதி.
ஊருல கொஞ்சப்பய படிச்சிட்டு இன்னிக்கு
உருப்படியா இருக்கான்னா கோனூர் வாத்தியார் புண்ணியந்தான்.
இப்பவும் எப்பவாவது பார்ப்பதுண்டு
கல்யாணமோ இழவோ என்று எதை முன்னிட்டாவது
ஊருக்குப் போகையில். அவரும் வந்திருப்பார் கோனூரிலிருந்து.
கசங்கிய வேட்டியில் தளர்ந்த மேனியில்
காலர் கிழிந்த ஒரு சட்டை போட்டிருப்பார்.
"நல்லா இருக்கியா?' 'சந்தோசமா இருக்குப்பா
உங்களயெல்லாம் பார்க்கும்போது"ன்னு சொல்வார்.
"நீங்க போட்ட பிச்சைதான் சார்"ன்னு சொல்லத் தோன்றும்.
Thursday, June 25, 2009
அதென்ன வாரி?
ஆறாவதுக்கு டவுனுக்கு போய்ட்டு படிக்கவேண்டியிருந்தது.
குடிசைகளா இருக்கிற என் ஊர்லருந்து ரெண்டு மைலு தொலைவு.
காலைலயும் சாயங்காலமும் நடக்கறது ஜாலியா இருக்கும்.
ஒரே விளையாட்டுதான் நட்புக்களோடு.
ஒத்த மாட்டு வண்டி போற அளவுக்குதான் ரோடு இருந்துச்சி.
ரெண்டு பக்கமும் கள்ளி உயரம் உயரமா.
எம்ஜியார் காலத்துலதான் மொத மொத ரோடு போட்டானுவன்னு தோணுது.
பொட்ட மண்ணு சைடுல கொட்டி, (பொட்ட மண்ணுன்னா செம்மண்)
ஜல்லி கொட்டி இருந்தது.
அதுக்கு முன்னாடி அம்பட்டன் வாரிகிட்ட
ரோட்ட வெட்டி அதுல
ஒரு மதகு கட்டினாங்க.
அப்பதான் தெரிஞ்சிது ரோடு இவ்வளவு அகலமான்னு!
நடந்து களைத்தபோது அதில் உட்கார்ந்து களைப்பு தீர்ப்பார்கள்
பிள்ளைகளும், வழிப்போக்கர்களும், சுமை தூக்கிகளும்.
சற்றமர்ந்து பிறகு தொடரும் பயணம்.
அடையாளமா சொல்றது அம்பட்டன் வாரியத்தான் எல்லோரும்.
அம்பட்டன் வாரிகிட்ட நில்லு.
அம்பட்டன் வாரில போயி குளிச்சிக்கலாம்.
அம்பட்டன் வாரிகிட்ட செத்த ஒக்காந்துட்டு போலாம்
.... இப்படியாக.
அதென்ன அம்பட்டன் வாரி!??
முடி வெட்டற ஆள் அங்க இருந்துதான் செய்வாரா?
சில தடவைகளில் மட்டும் அப்படி பார்த்திருக்கேன் கலியனை.
கலியன்தான் முடிவெட்டுற ஆள் அப்பல்லாம் எங்க ஊருக்கே.
வருசம் ஒரு தடவ குத்தகையோ மான்யமோ வாங்கிப்பார் மொத்தமா.
எத்தனை தடவ வேணும்னாலும் முடி வெட்டிக்கலாம் வருசம் பூரா.
காசுக்கு வேலையில்லை அப்பல்லாம்.
ஒரே கட்டிங்தான்.
ஸ்டைலு எல்லாம் கிடையாது. அவ்ருக்கு தெரியவும் தெரியாது.
அப்பருந்தே இந்த இடம்தானோ? அதனால்தானோ இது அம்பட்டன் வாரி!தெரியவில்லை. பலரிடமும் விசாரித்ததில்
'தெரில. இருக்கும். அப்ப தெனக்கிம் இங்கருந்து செய்திருக்கலாம்'
அதனால வந்திருக்கலாம் இந்தப் பேரு.
வாரில தண்ணி போய்ட்டு இருக்கிறது வசதியா இருந்திருக்கும்.
அப்பருந்தே தொடர்ந்தும் இருந்திருக்கலாம்.
பின்னாட்களில் ஒரு
நிலப்பிரச்னை விஷயமா
தாலுக்காபீஸ்க்கு போனபோது
தென்னாற்காடு ஜில்லா மேப் பார்க்க முடிஞ்சது.
கண்ணுல விளக்கெண்ணை விட்டுப் பார்த்தபோது
மெல்ல என் ஊரையும் பார்க்க முடிஞ்சது. அப்படியே
நாங்க பள்ளிக்கூடம் போற வழி..
அந்தப் பேர் இருந்துச்சி இங்லீசுல சின்ன எழுத்துல.
"ஹாமில்ட்டன் கேனல்"ன்னு.
ஹாமில்ட்டன் துரை காலத்துல
அந்த வாரியும் பழைய பாலமும் உருவான வரலாறு சொன்னார் அதிகாரி. அட, ஹாமில்ட்டன் அம்பட்ட்ன் ஆன கத தெரிஞ்சுது அப்பத்தான்.
குடிசைகளா இருக்கிற என் ஊர்லருந்து ரெண்டு மைலு தொலைவு.
காலைலயும் சாயங்காலமும் நடக்கறது ஜாலியா இருக்கும்.
ஒரே விளையாட்டுதான் நட்புக்களோடு.
ஒத்த மாட்டு வண்டி போற அளவுக்குதான் ரோடு இருந்துச்சி.
ரெண்டு பக்கமும் கள்ளி உயரம் உயரமா.
எம்ஜியார் காலத்துலதான் மொத மொத ரோடு போட்டானுவன்னு தோணுது.
பொட்ட மண்ணு சைடுல கொட்டி, (பொட்ட மண்ணுன்னா செம்மண்)
ஜல்லி கொட்டி இருந்தது.
அதுக்கு முன்னாடி அம்பட்டன் வாரிகிட்ட
ரோட்ட வெட்டி அதுல
ஒரு மதகு கட்டினாங்க.
அப்பதான் தெரிஞ்சிது ரோடு இவ்வளவு அகலமான்னு!
நடந்து களைத்தபோது அதில் உட்கார்ந்து களைப்பு தீர்ப்பார்கள்
பிள்ளைகளும், வழிப்போக்கர்களும், சுமை தூக்கிகளும்.
சற்றமர்ந்து பிறகு தொடரும் பயணம்.
அடையாளமா சொல்றது அம்பட்டன் வாரியத்தான் எல்லோரும்.
அம்பட்டன் வாரிகிட்ட நில்லு.
அம்பட்டன் வாரில போயி குளிச்சிக்கலாம்.
அம்பட்டன் வாரிகிட்ட செத்த ஒக்காந்துட்டு போலாம்
.... இப்படியாக.
அதென்ன அம்பட்டன் வாரி!??
முடி வெட்டற ஆள் அங்க இருந்துதான் செய்வாரா?
சில தடவைகளில் மட்டும் அப்படி பார்த்திருக்கேன் கலியனை.
கலியன்தான் முடிவெட்டுற ஆள் அப்பல்லாம் எங்க ஊருக்கே.
வருசம் ஒரு தடவ குத்தகையோ மான்யமோ வாங்கிப்பார் மொத்தமா.
எத்தனை தடவ வேணும்னாலும் முடி வெட்டிக்கலாம் வருசம் பூரா.
காசுக்கு வேலையில்லை அப்பல்லாம்.
ஒரே கட்டிங்தான்.
ஸ்டைலு எல்லாம் கிடையாது. அவ்ருக்கு தெரியவும் தெரியாது.
அப்பருந்தே இந்த இடம்தானோ? அதனால்தானோ இது அம்பட்டன் வாரி!தெரியவில்லை. பலரிடமும் விசாரித்ததில்
'தெரில. இருக்கும். அப்ப தெனக்கிம் இங்கருந்து செய்திருக்கலாம்'
அதனால வந்திருக்கலாம் இந்தப் பேரு.
வாரில தண்ணி போய்ட்டு இருக்கிறது வசதியா இருந்திருக்கும்.
அப்பருந்தே தொடர்ந்தும் இருந்திருக்கலாம்.
பின்னாட்களில் ஒரு
நிலப்பிரச்னை விஷயமா
தாலுக்காபீஸ்க்கு போனபோது
தென்னாற்காடு ஜில்லா மேப் பார்க்க முடிஞ்சது.
கண்ணுல விளக்கெண்ணை விட்டுப் பார்த்தபோது
மெல்ல என் ஊரையும் பார்க்க முடிஞ்சது. அப்படியே
நாங்க பள்ளிக்கூடம் போற வழி..
அந்தப் பேர் இருந்துச்சி இங்லீசுல சின்ன எழுத்துல.
"ஹாமில்ட்டன் கேனல்"ன்னு.
ஹாமில்ட்டன் துரை காலத்துல
அந்த வாரியும் பழைய பாலமும் உருவான வரலாறு சொன்னார் அதிகாரி. அட, ஹாமில்ட்டன் அம்பட்ட்ன் ஆன கத தெரிஞ்சுது அப்பத்தான்.
Subscribe to:
Posts (Atom)