Search This Blog

Tuesday, July 28, 2009

ஆயா

ஆயா எப்ப‌வாவ‌து ஊருக்கு வ‌ரும்.
த‌லையில‌ ஒரு மூட்டை
இடுப்புல‌ ஒரு பையி.
விடிகாலைல‌ கிள‌ம்பி
ப‌த்த‌ர‌ ப‌தினொன்ர‌ மணிக்கு வ‌ரும்.
ப‌ஸ்ஸுல‌ இற‌ங்கி ரெண்டு மைலு
ந‌ட‌ந்தேதான் வ‌ரும் வெயில்ல‌.
செருப்பாவ‌து ஒண்ணாவ‌து.
பொடி சுடுந்தான்.
பேர‌ப் புள்ளுவ‌ வூட்ல‌ இருக்கிற‌
நாயித்துக் கிய‌‌மையா பார்த்து வ‌ரும்.
அவிச்ச‌ த‌ட்ட‌ப்ப‌யிரு, ப‌ச்ச‌ப்ப‌யிரு
அப்ப‌ப்ப‌க்கி கிடைக்கிற‌
கெளாக்கா, ஈச்ச‌ம்ப‌ழ‌ம், வெள்ள‌ரிப்ப‌ழ‌ம்ன்னு
சும‌ந்து வ‌ரும்.
வெல்ல‌ம் சேத்து இடிச்சி புடிச்ச‌
ப‌ச்ச‌ப்ப‌யிருருண்டை பெரிசா அஞ்சாறு.
வேக‌வ‌ச்சி கொஞ்ச‌ம், வ‌றுத்து கொஞ்ச‌ம்ன்னு
ம‌ல்லாட்ட‌ இருக்கும் பையில‌.
"புள்ளுவ‌ ஆச‌யா சாப்புடும்"ன்னு.
எடுத்து எங்க‌கிட்ட‌ கொடுத்து
நாங்க‌ ஆச‌யா சாப்புட‌ற‌த‌ பார்த்து
ர‌சித்து சிரிக்கும் ஆயா.
செருவாடு சேத்த‌த‌ எடுத்து கொடுக்கும் என்கிட்ட‌
சுருக்கு பையில‌ அன்னிக்கே இருக்கும் 100 ரூவா.
"இந்தாய்யா . வ‌ச்சிக்க‌. ஏதாவ‌து வாங்கித் தின்னு"
வ‌ந்தா ஒரு அர‌ ம‌ணி நேர‌ம்
க‌ட்டிட்டு இருக்கிற‌ நூல் புட‌வைத் த‌லைப்பை
அப்ப‌டியே விரிச்சி
ம‌ண் த‌ரையில‌ ப‌டுத்துக்கும். அச‌தி.
"ஆடு மாடுவ‌ள‌ அப்ப‌டிஅப்டியே வுட்டுட்டு வ‌ந்தேன்
கெள‌ம்புற‌ன்யா"ன்னு சொல்லும் ம‌திய‌ம் சாப்ட‌வுட‌னே.
"ச‌ரி"ன்னு சொல்லிட்டு வெள‌யாட‌ப் போயிறுவோம்.
'ஆயாக்கு டாட்டா காட்டு'ன்னு
சொல்லி வாங்கிக்கும்.
அத்த‌னை ச‌ந்தோஷ‌ம் அதுக்கு, நாங்க‌ டாட்டா காட்டுற‌தில‌.
"ந‌ல்லா ப‌டிங்க‌"ன்னு சொல்லிட்டு போன‌ ஆயா இப்ப‌ இல்ல‌.
க‌ட‌சீயா மூஞ்ச‌க் கூட‌ பாக்க‌ முடியாம‌ப்போச்சு.
"இப்ப‌க் கூட‌ எங்க‌ள‌ நென‌ப்பியா ஆயா?!!"
- அன்புட‌ன்ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

ப‌ள்ளி




அய்யனார் குள‌த்த‌ருகே அமைந்திருந்த‌து.
ம‌ழை பெய்தால் ஒழுகும் கூரை.
ம‌ண் த‌ரையெங்கும் திட்டுத்திட்டாக‌
மழைநீர் தேங்கியிருக்கும்.
ப‌ள்ளி வ‌ந்த‌வுட‌ன் அள்ளிப் போட‌வேண்டும் பிள்ளைக‌ள்.
அங்க‌ங்கு திற‌ந்திருக்கும் சுவ‌ர்க‌ள்.
பெரிய‌ வாத்தியார் வீட்ல‌ருந்து பெரிய‌ பெரிய‌
சாக்குப்பைக‌ள் கொண்டுவ‌ந்து ஈர‌த்த‌ரையில் போட்டம‌ருவோம்.
கோனூர் வாத்தியார்தான் எல்லோருக்கும் வாத்தியார்.
ஒரே வாத்தியார்தான்.
வெற்றிலைப் பாக்கு
ஒன்றிர‌ண்டு வாழைப்ப‌ழ‌ம் வைத்து
எலுமிச்ச‌ மிட்டாய் எல்லோருக்கும் கொடுத்து
அக‌ல‌ப்ப‌ர‌ப்பிய‌ நெல்லில்
'அ' எழுதித் துவ‌க்கினோம் அக‌ர‌த்துப் பிள்ளைக‌ள்.
கைப்பிடித்து அவ‌ர் ம‌டிய‌ம‌ர்ந்து
அவ‌ர் சொல்ல‌ச் சொல்ல‌ ம‌ல‌ங்க‌ விழித்து
துவ‌க்கினோம் துவ‌க்க‌க் க‌ல்வியை!
காலை வ‌ந்த‌துமே பச‌ங்க‌ கூப்பிட‌த்தான் போவோம்.
ஒரு குச்சியெடுத்துட்டு அவ‌ரும் வ‌ருவார்
ஊரைச்சுத்தி.
சில‌பேரத்தான் புடிக்க‌வே முடியாது.
டிமிக்கி கொடுத்துடுவானுவ‌ ப‌ள்ளிக்கூட‌த்துக்கு.
'என்ன‌ ராமாஞ்ச‌ம், ஒம்மொவ‌ன‌ ரெண்டு நாளா காணோம்?'
''ப‌யிரு தூக்கிப் போட‌றான் வாத்யார‌, வ‌ந்துடுவான்
''உருப்ப‌ட‌ வுடுய்யா அவ‌ன‌'வாத்தியாரின் வேத‌னை ராமாஞ்ச‌த்துக்குப் புரியாது.
'எங்க‌ள‌யெல்லாம் கோனூர் அண்ண‌ன்
விட்ட‌த்துல‌ தொங்க‌வுட்டு அடிப்பாரு.
அப்ப‌வும் ப‌டிப்பேற‌ல‌ என‌க்கு' சொல்லும் முருகேச‌ன் சித்த‌ப்பா.
ஊரில் அத்த‌னை பேரையும் தெரியும் வாத்தியாருக்கு.
'எதுக்கு வாத்யார‌ அவ‌ன‌வ‌ன் பொழ‌ப்ப‌ கெடுக்குற‌'ன்னு
வாத்யார‌ ச‌லிச்சிப்பார் ம‌ளிகைக்க‌டை வெச்சிருக்கிற‌‌
வெங்க‌ட்ராம‌ செட்டியார். பெரும் நில‌புலாதிப‌தி.
ஊருல‌ கொஞ்ச‌ப்ப‌ய‌‌ ப‌டிச்சிட்டு இன்னிக்கு
உருப்ப‌டியா இருக்கான்னா கோனூர் வாத்தியார் புண்ணிய‌ந்தான்.
இப்ப‌வும் எப்ப‌வாவ‌து‌ பார்ப்ப‌துண்டு
க‌ல்யாண‌மோ இழ‌வோ என்று எதை முன்னிட்டாவ‌து
ஊருக்குப் போகையில். அவ‌ரும் வ‌ந்திருப்பார் கோனூரிலிருந்து.
க‌ச‌ங்கிய‌ வேட்டியில் த‌ள‌ர்ந்த‌ மேனியில்
கால‌ர் கிழிந்த‌ ஒரு ச‌ட்டை போட்டிருப்பார்.
"ந‌ல்லா இருக்கியா?' 'ச‌ந்தோச‌மா இருக்குப்பா
உங்க‌ள‌யெல்லாம் பார்க்கும்போது"ன்னு சொல்வார்.
"நீங்க‌ போட்ட‌ பிச்சைதான் சார்"ன்னு சொல்ல‌த் தோன்றும்.