Search This Blog

Tuesday, December 8, 2009

தமிழனுக்கொரு மாயலோகம்...!

தமிழ்த் திரையுலகக் கூத்தாடிகள்
அரங்கேற்றிய இன்னொரு மெகா ஷோ
முன்னனி தொலைக்காட்சியொன்றில்
பொறுக்கிகளையும், சல்லிப்ப்பயல்களையும்...
மார்புப் பிளவுகளையும் தேவையெனில்
குறி தவிர்த்துப் பெருந்தொடைகளையும்
திறந்து காட்டும் சதைப்பிண்டங்களையும்
ஒருசேரக் காணும் பாக்கியம் தமிழனுக்கு!
பளபள உடைகளின் பின்னாலிருக்கும்
எதுவும் தெரியாமல்தான் தமிழனை
வைத்திருக்கிறார்கள் கலைஞர்கள்!
கந்தைத்துணியுடுத்தி
சோத்துக்கு சிங்கியடிக்கும்
தமிழச்சிகளை இவர்களின் பருத்த  மார்புகளும்
வழுவழுத்தொடைகளும்
வண்ண உதடுகளும் தொப்புள் வளையங்களும்
பெரும் மாயலோகத்தில் சஞ்சரிக்க வைக்கிறது.
சந்ததி குறித்து கவலை வேண்டாம்.
சாப்பாட்டுக்கவலை வேண்டாம்
ரெண்டு ரூபாய் அரிசிக்கஞ்சி குடித்து
காலம்முழுக்க கடந்தால் போதும்.
இலவசப் புடவை பெற்று
இடுப்பு மறைத்தால்  போதும்.
கூலிக்குக்கொடுத்த காசை திரும்பப்பெற
அரசுக்கு இருக்கு டாஸ்மாக்.
பசி மறப்பான் பட்டினி மறப்பான்
பாவித்தமிழன்  தனை மறந்து.
விபச்சாரம் செய்யும் புவனேஸ்வரிகளையும்
யூனிட் அழைக்கையில் கக்கூஸ் போகும்
திரிஷாக்களையும்
மார்புகளில் புற்று வரலாம் என்கிற
நமீதாக்களையும், மாளவிகாக்களையும்
இன்ன பிற மினுக்கு மேனிகளையும்
எய்ட்சும் தாக்கலாம், எமனும் தாக்கலாம்.
போடா தமிழா, வேலையைப்பார்.
எல்லாப்பயல்களுக்கும் எல்லாத்தையும் காட்டும்
இவர்களைத்தெரியாமல்தான்
முருகேசன் கையைப்பிடித்தான்
என்பதற்காய்
தூக்குப்போட்டு செத்துப்போனாயோ அஞ்சலை?!!!!


அன்புட‌ன்
ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது