Search This Blog

Thursday, November 19, 2009

மழை

மழை பெய்து ஓய்ந்த தருணங்களின்
பின்னான உன் வருகையால்
மென் வெப்பம் நீங்கி அறையெங்கும்
குளிர்மை நிரம்புகிறது.
கணஇருள் படர்ந்திருக்கும் அறையின்
சுவற்று மாடமொன்றில்
சிறுவிளக்கேற்றி
மெல்லொளியில் உன் முகம் தேடுகிறேன்.
எச்சலனங்களையும் காட்டாத உன் முகம்
வாழ்ந்த காலங்களில் இருந்ததைப் போலவே.
மீண்டும் அடித்துச் சீறுகிற மழையின் பேரிரைச்சலும்
பேய்க்காற்றின் ஓலமும்
சன்னலுக்கு வெளியே செவிகள் துளைக்க...
குறுநகையொன்றை உதிர்த்துவிட்டு என்
கண்களை நோக்கும் உன்னை
எதிர்கொள்ளமுடியாமல்
பின்வாங்குகிற ஒவ்வொரு பொழுதும்
மன்னிப்புக்கோருவதாய் எண்ணி
கரம் பற்ற எத்தனிக்கும் ஒவ்வொரு நொடியிலும்
திடுமென மறைகிறாய்...
மழை நின்ற நேரத்தில்
அறை மீண்டும் அமைதி பெறுகிறது.
--
அன்புட‌ன்
ப‌.ம‌திய‌ழ‌க‌ன்